வரும் 9ம் தேதி தலைமை செயலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு
May 29 2023 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமை செயலகம் முன்பு வரும் 9ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து தனியார் அரங்கில் இந்த சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில் தலைமைச் செயலகம் முன்பு வரும் 9ம் தேதி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.