தேனி அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு
Jan 13 2024 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாச்சியார்புரம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்குவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் நாச்சியார்புரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.