நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானத்தின் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் - போலீசார் பங்கேற்பு
Mar 25 2017 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானத்தின் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், உடலில் ஏற்படும் பாதிப்புகள், உடனடி மரணம் உள்ளிட்டவை குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தியவாறு இப்பேரணியில் பங்கேற்றனர். விழிப்புணர்வு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்தல், தயாரித்தல், பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பேரணி பள்ளிப்பாளையம், ஈரோடு சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று நகராட்சி வளாகத்தில் நிறைவடைந்தது. கல்லூரி மாணவ-மாணவியர், மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.