போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரை அகல ரயில் பாதை அமைப்புப் பணிகள் நிறைவு - சோதனை ஓட்டம்
Mar 25 2017 8:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம், போத்தனூரில் இருந்து, பொள்ளாச்சி வரை நடைபெற்று வந்த அகல ரயில் பாதை அமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
போத்தனூர் - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டத்தின் நிறைவாக, போத்தனூர்-பொள்ளாச்சி இடையே, 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓப்புதல் அளித்த பின்னர், போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக, தென்மாவட்டங்களுக்கு விரைவில் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.