R.K.நகர் தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. அம்மா சார்பில் போட்டியிடும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் திரு. TTV தினகரனுக்கு ஆதரவாக, அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொகுதிக்கு உட்பட்ட 38-வது வார்டைச் சேர்ந்த நேதாஜி நகர் மற்றும் பள்ளிவாசல் பகுதியில், அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு. TTV தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் திரு. K.A.செங்கோட்டையன், திரு. செல்லூர் கே. ராஜு, திரு. எம்.சி. சம்பத், திருமதி எஸ். வளர்மதி ஆகியோர் பள்ளிவாசல்களுக்குச் சென்று, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, தொப்பி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
வ.உ.சி. நகர் பகுதியில், அமைச்சர்கள் திரு. R.B.உதயகுமார், திரு. ஜி. பாஸ்கரன் ஆகியோர் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினர். வீடு வீடாகச் சென்று, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, திரு.டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். R.K.நகர் தொகுதியில் தாய்மார்களின் ஆதரவுடன், திரு. TTV தினகரன் அமோக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் திரு. R.B.உதயகுமார் தெரிவித்தார்.
இத்தொகுதிக்குட்பட்ட 42-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில், கழக இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பா.வளர்மதி, வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடமும், மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடமும், தொப்பி சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திரளான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் உடன் சென்றனர்.
இதனிடையே, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கழக வேட்பாளர் திரு.TTV தினகரனுக்கு ஆதரவாக, தொப்பி சின்னத்தில் வாக்களிக்கும்படி 47-வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்றும், திண்ணை பிரச்சாரம் செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.