ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா - காளைகளை ஏறுதழுவி பார்வையாளர்களை மகிழ்வித்த இளைஞர்கள்
Mar 26 2017 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவில், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, இளைஞர்கள் தீரத்துடன் ஏறுதழுவியதை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தம்மம்பட்டி-துறையூர் சாலையில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். முதலில், வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று ஏறுதழுவிய காட்சியை அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
காளைகளை பிடித்த வீரர்களுக்கு வெள்ளிப்பொருட்கள், செல்போன், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.