பெண் உரிமை, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கோவையைச் சேர்ந்த பெண்கள் கார் மூலம் லண்டன் வரை செல்லும் விழிப்புணர்வு பிரச்சாரம்
Mar 26 2017 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் உரிமை மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கோவையைச் சேர்ந்த பெண்கள் கார் மூலம் லண்டன் வரை செல்லும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த மீனாட்சி, மூகாம்பிகை, வேதிகா மற்றும் மும்பையை சேர்ந்த ப்ரியா பால் ஆகிய 4 பெண்களும், பெண்ணுரிமை கோரிக்கையை முன்வைத்து கார் மூலம் நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இங்கிலாந்து தலைநகர் லண்டன் வரை சுமார் 70 நாட்கள் பயணம் செய்யும் இந்த முயற்சியை இன்று கோவையில் இருந்து தொடங்கினர். இதனை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி தொடங்கிவைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இருசக்கர வாகனம் மூலம் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தனர். சுமார் 24 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை இப்பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த சாதனை பயணத்திற்காக 70 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்றும், இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.