பழனியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பேக்கரி மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு தரமில்லாத பொருட்கள் பறிமுதல்
Apr 27 2017 8:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பேக்கரி மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு தரமில்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயல்பட்டு வரும் உணவு விடுதி மற்றும் பேக்கரிகளில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது. இதில் தரமில்லாத பொருட்கள் மற்றும் தேதி குறிப்பிடப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 15 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவறு இழைக்கும் கடைகளுக்கு வரும் காலங்களில் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.