சிவகாசியில் சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 41 வீடுகள் அகற்றப்பட்டன : ஆக்கிரமிப்பு தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கீடு
Apr 27 2017 8:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சிவகாசியில் சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 41 வீடுகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகராட்சி எல்லைக்குட்பட்ட சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற கோரி 1991ஆம் ஆண்டு சிவகாசி வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் கட்டித்தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், 41 ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சிவகாசி ஆணையூரில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட 41 வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இன்று அகற்றப்பட்டன.