நியாய விலைக் கடைகளில் எளிதில் பொருட்களைப் பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கிய தமிழக அரசுக்கு திருச்சி மாவட்ட மக்கள் நன்றி
Apr 28 2017 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பொருட்களைப் பெறும் வகையில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 453 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். கே.எஸ். பழனிச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு, அவர் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். பொதுமக்கள் வசதிக்காக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குன்னூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களின் பல்வேறு தேவைகளை கேட்டறிந்தனர். பின்னர், கடந்தாண்டு வழங்கப்பட்ட 18 அயிரம் மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரித்து வரும் பழங்குடியினருக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், கட்டுமான தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று, தங்களை நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் செசன்ஸ் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், தீர்வு செய்யப்பட்ட வழக்குகள், சுற்றுச்சூழல், கருவேலமரங்கள் அகற்றும் பணி போன்றவற்றை நீதிபதி. திரு. கோகுல்தாஸ் ஆய்வு செய்தார்.