நாடு முழுவதும் 110 மோசடி குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் பொய்ப்புகாரின்பேரில், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்வது நியாயமற்றது, அநீதியானது - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் - தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் வாங்க முயன்றவர் யார்? - அவர் மீது ஏன் வழக்கு தொடரவில்லை? என்றும் கேள்வி
Apr 28 2017 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் 110 மோசடி குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் பொய்ப் புகாரின்பேரில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது நியாயமற்றது, அநீதியானது என அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. தா. பாண்டியன், தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் வாங்க முயன்றவர் யார்? அவர் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மறைவுக்குப் பின்னர், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், தமிழக மக்கள் நலன் சார்ந்த எல்லாப் பிரச்னைகளிலும் மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகவும், நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர். நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.