பரமக்குடி அருகே நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமானை மீட்டு பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
Apr 28 2017 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை அங்குள்ள நாய்கள் துரத்தியுள்ளன. இதையடுத்து அந்த மான் எஸ்.எஸ்.கோவில் தெருவில் உள்ள ராணுவீரர் திரு.முருகன் என்பவரின் வீட்டுக்குள் அடைக்கலம் தேடி புகுந்தது. நாய்களை விரட்டிவிட்டு புள்ளிமானை காப்பாற்றிய அவர், புள்ளிமானை வனத்துறையிடம் ஒப்படைத்தார். புள்ளிமானை கைப்பற்றிய வனத்துறையினர், அதற்கு உரிய சிகிச்சை அளித்து, திருப்பத்தூர் வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.