பாரம்பரியத்திற்கும், புராதானக் கலைகளுக்கும் பெயர்போனது தமிழகம் : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புகழாரம்
Apr 30 2017 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்ட குடும்பநல நீதிமன்றம், ஜெயங்கொண்டத்தில் சார்பு நீதிமன்றம் மற்றும் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, குத்துவிளக்கேற்றி கல்வெட்டை திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிமன்றங்கள் திறம்பட செயலாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பாரம்பரியம், புராதனம் மற்றும் கலைகளுக்கு தமிழகம் பெயர்போனது என புகழாரம் சூட்டிய அவர், நீதிமன்றங்கள் அதன் பெருமையை நிலைநாட்டும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, பெருமாள் கோயில் தெருவில், குடும்ப நல நீதிமன்றத்தை திறந்துவைத்த இந்திரா பானர்ஜி, வழக்கு விசாரணையை பார்வையிட்டார்.