ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 8 கோடி ரூபாயில் புதிய அரசு கலைக்கல்லூரி, 26 கோடியில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி கட்டடங்கள், பல்வேறு மாவட்டங்களில் 422 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் - காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Jun 26 2017 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி கட்டடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த மாண்புமிகு அம்மா, தண்டையார்பேட்டையில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிவைத்த புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இதுவரை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இக்கல்லூரிக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்களை முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

இதேபோன்று, மறைந்த மாண்புமிகு அம்மா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஆர்.கே.நகரில் தொடங்கிவைத்த புதிய அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள், தண்டையார்பேட்டை காமராஜர் சாலை அருகே 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்துவைத்தார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் 15 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 25 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நபார்டு கடனுதவி திட்டத்தின்கீழ் 3 ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 5 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். பல்வேறு மாவட்டங்களில் 421 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

இதுமட்டுமின்றி நெடுஞ்சாலை, தொழிலாளர் நலன், எழுதுபொருள் அச்சுத்துறை ஆகியவற்றில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 50 பேருக்கு மஸ்தூர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளின்போது, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00