திருத்தணி நகராட்சிப் பகுதியில் ஆட்சேபணையற்ற அரசு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
Jun 26 2017 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி நகராட்சிப் பகுதியில் ஆட்சேபணையற்ற அரசு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் திரு.R.B. உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று திருத்தணி நகராட்சிப் பகுதியில், அரசு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் திரு. நரசிம்மன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பதிலளித்துப் பேசிய அமைச்சர் திரு.R.B. உதயகுமார், இதனைத்தெரிவித்தார். இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஐந்தாண்டுகளில் 56 துணைமின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் கேள்விநேரத்தின்போது தெரிவித்தார்.