தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆய்வுப் பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டனர்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போது செய்தியாளர்களிக்கு பேட்டி அளித்த அமைச்சர் 12 மாவட்டங்களில் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்கு உட்பட்ட கவுந்தபாடி புதூர், ஆவாரஸ்காட்டூர், திப்பி செட்டி பாளையம் உள்ளிட்ட 20 இடங்களில், ஒன்றரை கோடி மதிப்பில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மெதூர் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் குடி மராமத்து பணிகளையும் அமைச்சர் திரு.பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் உள்ள பவானி கட்டளை கதவணை நீர்மின் திட்டம் அலகு 3-ல், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் தூண்கள் பழுதடைந்துள்ளனர். இதையடுத்து, தூண்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் திரு.பி.தங்கமணி ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு.விஜய பாஸ்கர், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக, கடியப்பட்டினம் கடற்கரை கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அருட்பணியாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம் மாநகரில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மற்றும் மதுரையில் நடைபெறும் புரட்சி தலைவர் MGR நூற்றாண்டு விழாவில், சேலத்தைச் சேர்ந்த கழக உறுப்பினர்கள் பெருந்திரளாக பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.