ரமலான் திருநாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமத்துவம், சமாதானம் நிலைத்து, நீடித்துப் பெருக வேண்டும் : இஸ்லாமிய பெருமக்களுக்கு, அ.இ.அ.தி.மு.க. அம்மா பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பிலும், கழகத்தின் சார்பிலும், துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புனித ரமலான் திருநாள் வாழ்த்து

Jun 26 2017 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

புனித ரமலான் திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் 'அ.இ.அ.தி.மு.க. அம்மா' பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள புனித ரமலான் வாழ்த்துச் செய்தியில், ஈகைத் திருநாளாம் புனித ரமலான் பெருநாளை பெருமகிழ்வோடு கொண்டாடும் தனது அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் எனும் ஐம்பெரும் கட்டளைகளை ஆயுளாகக் கொண்டு வாழும் இஸ்லாமிய பெருமக்கள், இப்புனித ரமலான் மாதம் முழுவதும் பகலெல்லாம் பசித்திருந்து, இரவெல்லாம் விழித்திருந்து, முழு மாதம் நோன்பு பிடித்து, முகமது நபி அவர்களுக்கு குர்-ஆன் அருளப்பட்டதை கொண்டாடி மகிழ்கின்ற இணையில்லாத் திருநாள் இப்புனித ரமலான்- பசியாலே, இல்லாதோர் படும்பாட்டை பசித்திருந்து உணர்ந்து, பாவங்கள் போக்கிடும் பண்புதனில் சிறந்து வாழ வேண்டும் என்பதை உலகுக்கே உணர்த்தும் உன்னத பெருநாள்- பகிர்ந்து பலருக்கும் உதவி செய்து வாழும் பண்பாட்டு நெறியால் புண்ணியம் கூட்டுகிற சொர்க்கத்தின் பாதையை சத்தியத்தால் வலுப்படுத்த முடியும் என்பதை சகலருக்கும் உணர்த்துகிற இணையற்ற பண்டிகை என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்புத் தொழுகைகளில் கலந்துகொண்டு உற்றார் உறவினர்களோடு ஒன்றாகி மகிழும் இந்நன்னாளில் நபி மொழியில் நல்வழி நடக்கும் மக்களுக்காக தனது நல்லாட்சியில் ஹஜ் புனித யாத்திரை சென்று வருவோருக்கு உதவி, உலமாக்களுக்கு ஓய்வூதியம், வக்ஃபு வாரியத்தின் சொத்துக்கள் மீட்பு, நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி என்றெல்லாம் புரட்சித் தலைவி அம்மா நல்கிய நாடுபோற்றும் திட்டங்களையெல்லாம் இவ்வேளையில் மகிழ்வோடு எடுத்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும், சமத்துவமும், சமாதானமும் நிலைத்து வாழவும், நீடித்துப் பெருகவும், எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா" பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பிலும், கழகத்தின் சார்பிலும் தனது புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00