இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்கள் உட்பட 42 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் - அந்நாட்டில் உள்ள 141 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்

Jun 26 2017 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்கு சென்ற 3 மீனவர்களையும், கடந்த 24-ம் தேதி இலங்கை கடற்படை பிடித்து சென்றதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, இந்த 14 பேர் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 42 மீனவர்களையும், அந்நாட்டில் உள்ள 141 படகுகளையும் உடனடியாக விடுவிக்க, பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதிய கடிதத்தில், ராமேஸ்வரத்திலிருந்து 2 இயந்திர படகுகளில் மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ஒரு இயந்திரப் படகில் கடலுக்கு சென்ற 3 மீனவர்களையும், நேற்று முன்தினம், இலங்கை கடற்படை முறையே தலைமன்னாருக்கும், காங்கேசன்துறைக்கும் கொண்டு சென்றுள்ளதை குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இந்த போக்கை தடுத்து நிறுத்த தூதரகம் மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதையும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் மழை-வெயிலில் காய்ந்து வருவதால் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை விடுவித்து, பழுதுநீக்கி ஒப்படைக்க வேண்டும் என்று, மறைந்த மாண்புமிகு அம்மா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதையும் முதலமைச்சர் நினைவுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நேற்று முன்தினம் பிடித்து செல்லப்பட்ட 14 மீனவர்கள் உட்பட அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 42 மீனவர்களையும், 141 படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00