சென்னை சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அறிவிப்பு
Jun 26 2017 7:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு B.A.L.L.B., B.Com.L.L.B உள்ளிட்ட ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர முறையில் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்காக 416 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக, 2 ஆயிரத்து 934 விண்ணப்பங்கள் மாணவ-மாணவியரிடமிருந்து பெறப்பட்டன.
இந்நிலையில், சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண், கலந்தாய்வு தேதி ஆகியவை நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் நாளை காலை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.