பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : மதுரையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு
Jun 26 2017 7:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களையொட்டி, மதுரையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, வரும் 30-ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே, எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் சாதனைகள், சந்திப்புகள், மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில், பிரம்மாண்ட சைக்கிள் மற்றும் அலங்கார ரத பேரணிகள் நடைபெற்றன. அமைச்சர்கள் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், திரு.செல்லூர் கே. ராஜு, திரு. R.B. உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு, எம்ஜிஆரின் புகழை பறைசாற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.