மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் கால்வாய் திட்டப்பணிகளை நேரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
Aug 23 2017 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் கால்வாய் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வைகை நதியின் உபரி வெள்ள நீர் மூலம் 58 கிராமங்களுக்குப் பாசன வசதி அளிக்கத் திட்டமிட்டு, உசிலம்பட்டி அருகே 20 வருடங்களுக்கு முன்னர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்னர், நாளடைவில் இப்பணி தொய்வடைந்தது. கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டி, 58 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கால்வாய் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்பணி வரும் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.