"அ.இ.அ.தி.மு.க. அம்மா" அமைப்பு ரீதியாகச் செயல்படும் தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, தூத்துக்குடி தெற்கு, திருப்பூர் புறநகர், விருதுநகர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பிரிவுகளுக்கு, புதிய நிர்வாகிகளை நியமித்து, துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
"அ.இ.அ.தி.மு.க. அம்மா" பொதுச்செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, தூத்துக்குடி தெற்கு, திருப்பூர் புறநகர், விருதுநகர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பிரிவுகளுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழக மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, எம்.ஜி.ஆர். மன்றம் ஆகியவற்றுக்கு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றம், எம்.ஜி.ஆர். இளைஞரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆகியவற்றுக்கு, புதிய பொறுப்பாளர்களை, திரு. டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
இதேபோல், "அ.இ.அ.தி.மு.க. அம்மா" அமைப்பு ரீதியாகச் செயல்படும் திருப்பூர் புறநகர், தூத்துக்குடி தெற்கு, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில், பல்வேறு பிரிவு பொறுப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு, கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட, துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.