மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறும் ரோஹிங்கா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தரக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், இன அழிப்பை கண்டித்தும் சென்னையில் நாம் தமிழர் கட்சி சர்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Sep 23 2017 8:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறும் ரோஹிங்கா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தர கோரி, மத்திய அரசை வலியுறுத்தியும், இன அழிப்பை கண்டித்தும் சென்னையில் நாம் தமிழர் கட்சி சர்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மியான்மரில் நடக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், ஓ.பன்னீர் செல்வம் போன்ற அரசியல்வாதிகளை உருவாக்குவதற்கு பதிலாக ஆசிரியர்கள் தீக்குளிப்பதே மேல் என்று குறிப்பிட்டார்.