உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் : ஏராளமானோர் கண்டுகளிப்பு
Oct 16 2017 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உடுமலைப்பேட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்தில், மாபெரும் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டி பந்தயம் நடைப்பெற்றது. ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் இருந்து 500- க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் திரளாக கலந்து கொண்டன.
200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைப்பெற்ற மாட்டு வண்டிபந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்தன. இதை ஏராளமான கிராம மக்கள் கண்டு களித்தனர்.