பொன்னேரியில் பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் சிரமம் : தீபாவளிப் பண்டிகையையொட்டி பொருட்களைக்கூட வாங்க முடியாமல் அதிருப்தி
Oct 19 2017 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேயில், ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடை, முக்கிய வணிகப் பகுதியில் அமைக்கப்படுவதால், பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை, தீபாவளிப் பண்டிகையையொட்டி, அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியாமல் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேயில், வரும் 21-ம் தேதி, ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கு, பஜார் வீதியை ஆக்கிரமித்து, பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை, நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், முக்கிய வணிக பகுதியில், பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருவதால், வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.