தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளின் விற்பனை களைகட்டியுள்ளது : கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை
Oct 19 2017 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளின் விற்பனை களைகட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகளை வாங்க, கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை தியாகராயநகர் பகுதியில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குற்றச்செயல்களை கண்காணிக்க 5 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளை சென்னை காவல்துறை ஆணையர் திரு.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.