திருப்பூரில் 103 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் - 5 தலைமுறையினர் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ச்சி
Dec 7 2017 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் 103 வயதை எட்டிய பாட்டிக்கு, 5 தலைமுறையினர் இணைந்து பிறந்த நாள் கொண்டாடினர்.
திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் ராமாத்தாள் என்பவர் 103 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். 5 தலைமுறைகளாக வாழ்ந்து எள்ளு பேத்தி கண்டுள்ள அந்த பாட்டியின் பிறந்தநாளைஅவரது பேரன்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இதற்காக பாட்டி ராமாத்தாளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் விதமாக, கேக் வெட்டி, அப்பகுதியினருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
இன்றைய கால கட்டத்தில் 70 ஆண்டுகள் வாழ்வது என்பதே, அரிய விஷயமாக உள்ள நிலையில், 103-வது பிறந்த நாளை கண்டு, இன்றும் தனக்கு தேவையானவற்றை அவரே கவனித்து கொண்டும், அனைத்து பேரன், பேத்திகளையும் அடையாளம் கண்டு பேசி வருகிறார். இது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இவருக்கு ஒரு மகன் மற்றும் நான்கு பெண்கள் என 5 குழந்தைகளும், அவர்களது குழந்தைகள் மற்றும் அவர்களின் பேத்தி என 5 தலைமுறையினர் சேர்ந்து மொத்தம் 42 பேர், தற்போது அவரின் குடும்பத்தினராக உள்ளதாகவும், அனைவரும் திருப்பூரிலேயே குடியிருந்து வருவதாகவும், தங்கள் பாட்டிக்கு இது போன்று பிறந்த நாள் விழா கொண்டாடி, அதில் 5 தலைமுறையினரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.