ஆர்.கே.நகர் தொகுதி நேதாஜி நகர், நாவலர் குடியிருப்பில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அணியினர் பணப்பட்டுவாடா - பணம் விநியோகித்தவர்களை கழகத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் - ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியீடு
Dec 17 2017 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் நாவலர் குடியிருப்பில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டபோது, அவர்களை கழக நிர்வாகிகள் கையும், களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், நாவலர் குடியிருப்பில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். அவர்களை கழக நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், நேதாஜி நகர், 5வது தெருவில் பணப்பட்டுவாடா செய்தவரை நேரடியாக பிடித்து போலீசாரிடம் கழக நிர்வாகிகள் ஒப்படைத்தனர். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.