ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 40-வது வார்டு வ.உ.சி நகரில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியினர் பணம் பட்டுவாடா : போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் பொதுமக்கள் அவேசம்
Dec 16 2017 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 40-வது வார்டு வ.உ.சி நகரில், போலீசார் துணையுடன், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியினர் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய், பணம் கொடுக்கும் போது கையும், களவுமாக பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை அழைத்து சென்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.