உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சையில், நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திலகர் திடலில் பிரம்மாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசுக்கு அழுத்தம் தரமுடியாத மக்கள் விரோத எடப்பாடி அரசைக் கண்டித்தும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வலியுறுத்தியும், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சை மாநகரில், நாளை காலை 8 மணி முதல், மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள தஞ்சை திலகர் திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உண்ணாவிரதத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றிபெறும் என கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதருதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஏற்பாடுகள் தீவிரம்
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சை திலகர் திடலில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்த எமது செய்தியாளர் ராம்குமார் தரும் கூடுதல் தகவல்களை இப்போது கேட்கலாம்...
விவசாயிகள் முடிவு
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையிலான உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அதன் காலக்கெடு முடிய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., தலைமையில் தஞ்சையில் நாளை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.