கொடைக்கானலில் தொடங்கவுள்ள மலர் கண்காட்சி : பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
May 17 2018 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடங்கவுள்ள மலர் கண்காட்சிக்காக, பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வரும் நாளை மறுநாள் தேதி மலர்கண்காட்சியுடன் கோடைவிழா துவங்க உள்ளது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும் பிரையண்ட் பூங்கா மற்றும் நகர பகுதிகளில் நடைபெற்று வரும் ஆயத்த பணிகளை, மாவட்ட ஆட்சியர் திரு. வினய், ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். நடைபாதையில் சுற்றுலா பயணிகள் போட்டு சென்ற குப்பைகளை தானே சேகரித்து அப்புறபடுத்திய மாவட்ட ஆட்சி தலைவரின் செயலைக் சுற்றுலாப் பயணிகள் பாராட்டினர். அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மலர்கண்காட்சி மற்றும் கொடைவிழா முன்னேற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், 19-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழா சிறப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.