பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் நீண்ட அவகாசம் அளித்தது தவறு என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி - காவிரி நதிநீர் பங்கீட்டில் அணைகளின் கட்டுப்பாடு மேலாண்மை ஆணையத்திடமே இருக்க வேண்டும் எனவும் கருத்து
May 20 2018 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அம்மாநில ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்தது தவறு என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இவ்வாறு தெரிவித்தார்.