54 கண்டுபிடிப்பாளர்கள் பெயர்களைச் சொல்லி சாதனை படைத்த சிறுமி தமிழினி : இந்திய சாதனைப் புத்தகம் - சாதனைச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
Jun 6 2018 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
54 பொருள்களைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் சொல்லி அசத்திய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழினி என்ற சிறுமிக்கு, இந்திய சாதனைப் புத்தகம், சாதனைச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது.
ராமநாதபுரம் சிகில் ராஜவீதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ராஜராஜேஷ்வரி தம்பதியின் மகள் தமிழினி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி படித்துவருகிறார். இவர், ஒரே நிமிடத்தில் 54 பொருள்களின் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை சிறிதும் யோசிக்காமல் நொடிப்பொழுதில் சொல்லி அசத்துகிறார். இந்தச் சாதனையை அவர் படிக்கும் பள்ளியில் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை ஜெயலெட்சுமி ஆகியோர் முன்பாக நிகழ்த்தினார். 54 கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் கூறி அசத்திய தமிழினியின் இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய சாதனைப் புத்தகத்தில் தமிழினியின் பெயர் பதிவேற்றப்பட்டது. இந்திய சாதனைப் புத்தக தென்னிந்தியப் பொறுப்பாளரான திரு. விவேக்ராஜ், சாதனைச் சிறுமி தமிழினிக்கு தங்கப்பதக்கம் அணிவித்து சாதனைச் சான்றிதழையும் வழங்கினார்.