மதுரை கீரைதுறை பகுதியில் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட ரேசன் கடை ஊழியரும், கழக வட்ட செயலாளருமான முனியசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த டிடிவி தினகரன் ஆறுதல் - 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்
Jun 23 2018 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை கீரைதுறை பகுதியில் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட ரேசன் கடை ஊழியரும், கழக வட்ட செயலாளருமான திரு.முனியசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கழக துணை பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், ஆறுதல் தெரிவித்து, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
மதுரை கீரைதுறை பகுதியில் வாழைத்தோப்பு என்ற இடத்தில் கடந்த 12ம்தேதி மர்மகும்பலால், ரேசன் கடை ஊழியரும், கழக வட்ட செயலாளருமான திரு.முனியசாமி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கழக நிர்வாகி முனியசாமியின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினரை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். முனியசாமியின் குழந்தைகள் இருவரின் பள்ளிப்படிப்பு செலவையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.