சர்வதேச ரோபோ வடிவமைப்பு - சென்னை கல்லூரி மாணவர்கள் சாதனை
Jul 4 2018 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைப்பெற்ற சர்வதேச அளவில் ரோபோ வடிவமைப்பு மற்றும் செயல்திறன் போட்டியில், சென்னை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உலகளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சீனாவில், சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்பக் திறமையை வெளிப்படுத்தும் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான டியான்ஜின் மாகாணத்தில் உள்ள டியான் ஜின் தொழில்நுட்பக் கல்லூரியல் நடைபெற்றது. இப்போட்டியில் சீனா, லாவோஸ், தைவான், ரஷ்யா உள்ளிட்ட சுமார் 56 நாடுகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
இப்போட்டியில், 18 முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான சூரிய மின்மிக்தி, 3டி பிரிண்டிங் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய 3 பிரிவிகளின் கீழ் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி தலைவர் மற்றும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் திறமையை வெளிப்படுத்தி இந்த சாதனையை படைத்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
சாதனை படைத்த சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவீன் தொழில்நுட்ப இயந்திரம் பரிசாக வழங்கப்பட்டது.