தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்‍கை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன

Jul 14 2018 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்‍கை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

காமராஜரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்‍கல்லுக்‍கு வருகை தரவுள்ள கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக திண்டுக்‍கல் மாநகர் மற்றும் திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்டக்‍கழகம் சார்பில் திண்டுக்‍கல்லிலும், மேற்கு மாவட்டக்‍கழகம் சார்பில் ஒட்டன்சத்திரத்திலும் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்‍க எடப்பாடி அரசு மறுத்து வருவதாக தெரிவித்தார்.

இக்‍கூட்டத்தில் கழக மருத்துவரணித் தலைவர் டாக்‍டர் கதிர்காமு, பழனி தொகுதி கழக உறுப்பினர் சேர்க்‍கை பொறுப்பாளர் திரு. முத்தையா, திண்டுக்‍கல் மாநகர் கழக மாவட்டச் செயலாளர் திரு. ராமுத்தேவர், திண்டுக்‍கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. நல்லுசாமி மற்றும் திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்‍கழகம் சார்பில், கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்‍கை முகாம் நடைபெற்றது. இதனை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.தருமலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 500க்‍கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

திருச்சியில், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அணி மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த பெண்கள் உட்பட 100க்‍கும் மேற்பட்டோர் விலகி, திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர். இதில் தேர்தல் பொறுப்பாளரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு. பாளை. அமரமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட உம்பளச்சேரி கிராமத்தை சேர்ந்த தி.மு.க, தே.மு.தி.க, கம்யூனிஸ்ட் மற்றும் இபிஎஸ், ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் நாகை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஆர்.சந்திரமோகன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக்த்தில் இணைந்தனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியில், காங்கிரஸ் கட்சியில் இருந்து 300க்‍கும் மேற்பட்டோர் விலகி, கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.இசக்‍கி சுப்பையா முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், நெல்லை புறநகர் வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.பாப்புலர் வி.முத்தையா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டக்‍ கழகம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம், எம்.ஜி.ஆர். காலனி, குடிக்காடு, அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கழகக்‍ கொடியேற்று விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு.பண்ணை வயல் பாஸ்கரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00