கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டிக்கு அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம் : கடந்த 6 மாதமாக செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
Jul 15 2018 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அருகே குடிநீர் தொட்டி அமைத்து ஓர் ஆண்டிற்கு மேலாகியுள்ள நிலையில், தண்ணீர் விநியோகம் செய்யாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், புதிய தண்ணீர் தொட்டிக்கு, மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில், வசிக்கும் மக்கள், பல மைல் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் கடந்த ஓர் ஆண்டுற்கு முன்பு, புதியதாக ஆழ்த்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி மூலம், தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தொட்டியில் தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக கிராம மக்கள் பல முறை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, குடி தண்ணீர் வேண்டி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பயனற்று கிடக்கும் தண்ணீர் தொட்டிக்கு மாலை அனிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தி, ஒப்பாரி வைத்து நூதன முறையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாத காலமாக செயல்படாததால், 5 ரூபாய் கொடுத்து குடிநீர் குடம் வாங்கி வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டு என செபஸ்தியார் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.