சென்னை அண்ணாநகர் பகுதியில் கழக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி : ஏராளமானோர் பங்கேற்று பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வழங்கினர்
Jul 15 2018 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அண்ணாநகர் பகுதியில், கழக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கினர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமானோர் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன. சென்னை அண்ணாநகர் பகுதியில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் படிவங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வி.பி. கலைராஜன், கழக அமைப்புச் செயலாளர் திரு. சுகுமார் பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் இணைவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.