பெருந்தலைவர் காமராஜரின் 116-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Jul 15 2018 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெருந்தலைவர் காமராஜரின் 116-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளுர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஏழுமலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர் திரு.ராஜூ, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி.செல்வமேரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டக் கழகம் சார்பில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட அம்மா பேரவைத் துணைச் செயலாளர் திரு.லெட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திரு. ஜென்கின்ஸ், நகரச் செயலாளர் திரு.அக்ஷயா கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் திருஉருவச்சிலைக்குதெற்கு மாவட்டக் கழகம் சார்பில், முன்னாள் மேயர் திருமதி.அந்தோனி கிரேஸி தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. மற்றும் நாடார் பேரவையினர் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூரில் நாடார் ஐக்கிய சங்கம் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.