சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது : மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி
Sep 19 2018 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலைத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீது பா.ஜ.க.வினர் நடத்திய தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அரசியல் தொடர்பான விமர்சனங்களுக்கு கருத்துகள் மூலம் பதில்சொல்லாமல், தாக்குதல் நடத்துவது சரியல்ல என அப்போது கமல்ஹாசன் கூறினார்.