சென்னை ஆர்.கே.நகரில் புதிதாக திறக்கப்பட்ட எரிவாயு நிறுவனம் : நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
Sep 21 2018 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஆர்.கே.நகர் காசிமேட்டில் புதிதாக திறக்கப்பட்ட ஆட்டோ எரிவாயு நிரப்பும் நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி எடப்பாடி அரசு ஆட்டோ எரிவாயு நிரப்பும் நிறுவனத்தை திறந்துள்ளது. இதனைக் கண்டித்து, ஜீவரத்தினம் நகர் மற்றும் காசிமேடு பகுதி மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும், அருகில் உள்ள மயானத்தில் அடிக்கடி பட்டாசுகள் வெடிப்பதால் இந்த நிறுவனத்தில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே எரிவாயு நிறுவனத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.