நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 14 நாட்கள் மின்வெட்டு அறிவிப்பு
Sep 21 2018 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 14 நாட்கள் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 24-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை மின்வெட்டு நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்வெட்டு நிலவும் என்றும், 50 ஆயிரம் வீடுகளில் மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசில், திடீரென அறிவிக்கப்பட்ட மின்தடையால் நெல்லை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர். மேலும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. கல்லூர் இ.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.