மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு அஞ்சியே, ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை, எடப்பாடி அரசு கைது செய்யவில்லை - கழக கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
Sep 21 2018 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு அஞ்சியே, ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை, எடப்பாடி அரசு கைது செய்யவில்லை என கழக கொள்கைபரப்புச் செயலாளர் திரு. தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
சீர்மரபினர் மக்களுக்கு மீண்டும் DNT சான்றிதழ் வழங்க வேண்டும், சீர்மரபினருக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மற்றும் கிராமத்தினர் 300-க்கும் மேற்பட்டோர், தமிழக அரசையும், அமைச்சர்களையும் கண்டித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்கதமிழ்செல்வன் இதில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வரும் ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை, மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு அஞ்சியே, எடப்பாடி அரசு கைது செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.