தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு - ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பழனிசாமி பதவி விலக வேண்டும் : இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்
Oct 23 2018 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி பழனிசாமி அணியினர் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைத்ததாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஊழல் புகாரில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.