மக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி
Nov 16 2018 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.
பாப்பிரெட்டிபட்டி பேருந்துநிலையம் எதிரே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தலைமை நிலையச் செயலாளர் திரு.பி.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து பேருரையாற்ற வருகை தந்த கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து நிறைவுரையாற்றிய திரு. டிடிவி தினகரன், எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திரு. ஆர்.ஆர். முருகன், தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் திரு.டி.கே.ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் திரு. சின்னசாமி, மாநில அமைப்புச் செயலாளர் திரு. வாசுதேவன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. செந்தமிழன், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் திரு. ஆர்.பாலு, கழக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட கழக செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.