பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகை தின வாழ்த்து
Nov 16 2018 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் பத்திரிகை தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான 'பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா' நிறுவப்பட்ட நாளான நவம்பர் 16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாகக் கொண்டாடப்படுவதாகவும், எந்தவித இடையூறும் இன்றி எவர் ஒருவரும் எந்தக் கருத்தையும் கொண்டிருப்பதையும், அதை உரிய ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்துவதையும் கருத்துரிமை என்ற வகையில் அடிப்படை உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எத்தகைய ஆட்சியாளர்கள் பதவி நாற்காலியில் அமர்ந்திருந்தாலும், கருத்து சுதந்திரம் முழு அளவில் உறுதிப்படுத்தப்படும் நாட்டில்தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் என்றும், அந்தப்பணியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், துணிச்சலாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு தனது வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.