கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், கீழ்பென்னாத்தூர் தொகுதி கீழ்கரிப்பூர் பகுதியில், பொதுமக்கள் பயனடையும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழக பிரிவு சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை கழக அவைத் தலைவர் திரு. சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி ஒன்றிய கழகம் சார்பில், கந்தம்பாளையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. P.P. சாமிநாதன், பரமத்தி ஒன்றிய செயலாளர் திரு. M.P. ஜெயா முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.
நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் சார்பில், உஞ்சனை, மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றிய கழக செயலாளர் C. ராஜேந்திரன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் K.P. மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகர் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், கரிமேடு, சிலோன்சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஷ. ராஜலிங்கம் நிலவேம்பு குடிநீர், பப்பாளிசாறு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். பகுதி கழக செயலாளர் சுப்பு, வட்டக் கழக செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.
நெல்லை புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடம் பகுதியில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.எஸ்.என். சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கலாபத்மகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரத்தில், கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்ட கழகக் செயலாளர் ஹென்றிதாமஸ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.