இந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை
Aug 20 2019 8:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சோமாலியாவாக மாற்றும் வகையில் திட்டங்களைக் கொண்டுவர ஆட்சியாளர்கள் துடிப்பதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் எழுச்சி உரை ஆற்றிய திரு.டிடிவி தினகரன், இந்தியாவின் வீர மங்கை என போற்றப்பட்ட மாண்புமிகு அம்மாவின் ஆட்சி தற்போது அடிமை ஆட்சியாக மாறிவிட்டது என வேதனை தெரிவித்தார். ஊருக்கெல்லாம் சோறுபோட்ட சோழ நாடு இன்று தண்ணீருக்காக கையேந்தும் நிலை இருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.