கும்பகோணத்தில் செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் மீது தாக்குதல் - இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
Aug 19 2019 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில், வீட்டின் அருகே செல்போன் பேசியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரத்தினம் என்பவரது வீட்டருகே அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் கட்ட பிரகாஷ் என்ற இரண்டு பேர் அடிக்கடி நின்று செல்போன் பேசி வந்துள்ளனர். இதனைதொடர்ந்து கவனித்து வந்த முதியவர் ரத்தினம், இதுகுறித்து அந்த இளைஞர்களிடம் கேள்வி எழுப்பியபோது, ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் கட்டபிரகாஷ் ஆகியோர் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முதியோர் ரத்தினத்தின் மகன் ராமு அளித்த புகாரில், சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.