தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல்
Aug 23 2019 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெண்ணலோடை கிராமத்தில் வெண்ணாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுக்களை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவிரி தண்ணீர், விரைந்து கடைமடை பகுதி வரை செல்வதற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். தூர்வாரும் பணிகள் வருகிற 26-ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.